|
Monday, 12 November 2012 05:53 |
|
சர்வதேச ரீதியில் நடைபெற்ற 9வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மாணவன் செல்வன் J. யூட் மிதுஷன் பிகிராடோ வெண்கலப்பதக்கம் வென்றார்.
இலங்கை , இந்தியா, சீனா, இந்தோனேசியா, ஈரான், மலேசியா, நேபாளம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தென்ஆபிரிக்கா, கொரியா, தாய்வான் போன்ற நாடுகளுக்கிடையில் சர்வதேச ரீதியில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியின் 9வது சர்வதேசப்போட்டியானது ஒக்டோபர் 29 தொடக்கம் நவம்பர் 1ம் திகதிவரை இந்தியத்தலைநகர் புதுடில்லியில் நடைபெற்றது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இப் போட்டியில் பங்குபற்றிய செல்வன் மிதுஷன் பிகிராடோ இதில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
|
|
Read more...
|